இருமனம் இணையும் திருமணநாளிலே
பறக்கும்
கிளிகள் வசந்த வானிலே ....
மங்கையின் நெத்தியில்
மாதவன் குங்குமம்
சங்குக் கழுத்திலே தாலியே
சங்கமம்.
பதினாறும் பெற்றதால்
இனி
ஆல் போல் தழைக்கும் இவள் சந்ததி
பாருக்குள்ளே
இவர் போல் உண்டோ
வேறொரு அதிதி....
மஞ்சள் முகத்தாளிற்கு
கொஞ்சல்
கெஞ்சலாய் பொழுதுகள்
கழியும்.
அறுகுபோல் தழைக்கவும்
ஆறுபோல் சுரக்கவும்
வளர்க நீவீர் வாழ்க நூறாண்டு....!
இருவரிக்குறளென
இருவரும்
இணைகையில்
செம்பொன்
சிவந்த கன்னம்
அம்மன் அருளால்
அருள் தரும் திண்ணம்
குலப்பெருமை காக்கும் பெண்ணே
பிரபாஜினி
இனி நீ
கிருஸ்ணனுக்கு தாசனாவாய்
அந்தத் தாசன் உனக்கு
ஆசனாவான்.
இணைந்து வாழ்வீர்
உமை மகேசுவரனாக
என்றும்
வையகம் போற்றும் வரனாக.....
கவிதை மட்டுவில் ஞானக்குமாரன் (29.10.2010)
எனது கவிதைகளின் தீவிர வாசகனான கிருஸ்ணதாசன் பிரபாஜினி திருமணத்துக்காக எழுதிய வாழ்த்துக்கவிதை.
No comments:
Post a Comment